ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
பயணத்திட்டக் குறிப்புகள்
ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினும் ஈகிளுடன் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கினர்.
சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம் எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிந்தபின், ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.
↑Jones, Eric M., ed. (1995). "The First Lunar Landing". Apollo 11 Lunar Surface Journal. NASA. Archived from the original on டிசம்பர் 27, 2016. பார்க்கப்பட்ட நாள் June 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑Grayzeck, Ed (December 11, 2003). "Apollo Landing Site Coordinates". US National Space Science Data Center. பார்க்கப்பட்ட நாள் September 7, 2013.