அறிவியலின் மெய்யியல் (philosophy of science) என்பது மெய்யியலின் ஒரு கிளையாகும். இது அறிவியலின் அடிப்படைகள், முறைகள், விளைவுகள் பற்றிப் பயிலும் மெய்யியலாகும். இப்புலத்தின் மைய வினாக்கள் அறிவியல் திறம் பற்றிய வரன்முறை, அறிவியல் கோட்பாடுகளின் நம்பகத் தன்மை, அறிவியலின் அறுதிக் குறிக்கோள் ஆகியவை ஆகும். இது உண்மைக்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆயும்போது மீவியற்பியல், உள்ளியல், அறிவாய்வியல் ஆகிய புலங்கள் பின்னிப் பிணைகின்றன.
அறிவியலின் மெய்யியல் குறித்த மையக் கருப்பொருள்கள் பற்றிய பொதுக் கருத்தேற்பு ஏதும் இன்னமும் உருவாகவில்லை. நோக்கமுடியாத பொருள்கள் பற்றிய நடப்பியல் உண்மையை அறிவியலால் வெளிப்படுத்தமுடியுமா? அறிவியலில் விரிநிலை உய்த்துணர்வுச் சிக்கலைக் (problem of induction) கருதுகையில் அறிவியல் பகுத்தறிவு முறையைச் சரியென நிறுவமுடியுமா? ஒட்டுமொத்தமான அறிவியலைப் பற்றிய இவ்வகைப் பொதுக் கேள்விகளைத் தவிர, சில அறிவியலின் மெய்யியலாளர்கள் உயிரியலின் மெய்யியல், இயற்பியலின் மெய்யியல் போன்ற தனித்தனி அறிவியல் புலங்களின் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கருதுகின்றனர். சில அறிவியலின் மெய்யியலாளர்கள் இக்கால அறிவியலின் முடிவுகளைக் கொண்டு மெய்யியலின் முடிவுகளை அடைகின்றனர்.
மெய்யியலின் வரலாறு குறைந்தது அரிசுட்டாட்டில் காலம்வரை சென்றாலும், அறிவியலின் மெய்யியல் தனித்துறையாக மலர்ந்தது 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான். குறிப்பாக, ஏரண நேர்க்காட்சிவாத இயக்கம் அனைத்து மெய்யியல் உரைகளுக்கும் உரிய வரைமுறைகளையும் பொருளுடைமையும் புறநிலையில் வைத்து மதிப்பிடத் தொடங்கிய பிறகுதான் எனலாம். தாமசு குஃன் என்பவரது நூலான அறிவியற் புரட்சிகளின் கட்டமைப்பு "கருத்தோட்டம்" (சிந்தனைச் சட்டகம்) என்ற கருத்துப்படிமத்தைப் பொதுநடைமுறைக்குக் கொணர்ந்தது. சிந்தனைச் சட்டகம் என்பதன் பொருள் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் புலத்தை வரையறுக்கப் பயன்படுத்தும் நடைமுறைகளின் கணம் அல்லது தொகுதி என்பதாகும். இந்த நூல் பகுத்தறிவு முறையில் தேர்வுசெய்த செய்முறைகளில் இருந்து பெறப்படும் படிபடியாகத் திரளும் அறிவே அறிவியலின் முன்னேற்றம் என்ற ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த கண்ணோட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கினார்".
இன்று சிலர் இயற்கையின் சீர்மை போன்ற அடிக்கோளியல் கற்பிதங்களில் அறிவியலை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். பலர் ஒருங்கியைபு அணுகுமுறையை (coherentism) அறிவியலுக்குப் பயன்படுத்தப் பார்க்கின்றனர். இதில் நோக்கீடுகளை ஒருங்கியைந்த முழுமையின் ஒரு பகுதியாக கோட்பாடு பொருட்படுத்தினால் அல்லது பொருள்தர வழிவகுத்தால் அந்தக் கோட்பாடு சரியானதாகக் கருதப்படும். பவுல் ஃபேயர்பெண்டு "அறிவியல் முறை" என்றே ஏதும் கிடையாது. எனவே அறிவியல் ஆய்வில் அனைத்து அணுகுமுறைகளையும் பயன்படுத்தலாம். ஏன், இயற்கையிகந்த முறைகளையும் கூடப் பயன்படுத்தலாம் என்கிறார். (பேயர்பெண்டு கண்ணோட்டம் அறிவியலின் மெய்யியலாரால் விதிவிலக்காகவே கருதப்படுகிறது.) டேவிட் புளூர், பாரி பார்னெசு போன்ற அறிஞர்கள் சமூகவியல் கண்ணோட்டத்தில் அறிவு எப்படி உருவாக்கப்படுகிறது என்ற வேறொரு அணுகுமுறையால் அறிவியலை விளக்கப் பார்க்கின்றனர். இறுதியாக, மாந்தரினப் பட்டறிவை முனைப்போடு பகுப்பாய்வு செய்யும் கண்ணோட்டத்தில் இருந்து அறிவிலை அணுகும் ஐரோப்பிய மெய்யியல் (continental philosophy) மரபும் நிலவுகிறது.
தனி அறிவியல் புலங்களின் மெய்யியல், ஐன்சுடைனின் பொது சார்பியல் எழுப்பிய காலச் சிக்கல் குறித்த மெய்யியலில் இருந்து, பொது அறிவியல் கொள்கைக்கான பொருளியல் வரையிலான பல கருப்பொருள்களில் ஆழ்கிறது. ஒரு மையக் கருப்பொருள் ஓர் அறிவியல் புலம் மற்றொன்றின் முறைகளுக்குச் சமனாகக் குறைக்கமுடியுமா என்பதாகும். அதாவது, வேதியியலை இயற்பியலுக்குக் குறைக்கமுடியுமா, அல்லது சமூகவியலை தனி மாந்தனின் உளவியலின் மெய்யியலுக்குக் குறைக்கமுடியுமா? என்பதே. தனி அறிவியலில் அறிவியலின் மெய்யியல் சார்ந்த பொதுக் கேள்விகளும் கூடுதல் கூர்மையுடன் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, புள்ளியியலின் அடிப்படைகளில் அறிவியலின் சிந்தனை முறைமையின் சரித்தன்மை பற்றிய கேள்வி எழுகிறது. குறிப்பாக எது அறிவியல் எதை அதிலிருந்து நீக்கவேண்டும் என்ற கேள்வி மருத்துவ மெய்யியலில் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. மேலும் கூடுதலாக உயிரியல், உளவியல், சமூகவியல் சார்ந்த மெய்யியல்களில் மாந்தனின் இயல்பை அறிவியல் ஆய்வுகளால் புறநிலையாக முடிவுசெய்ய முடியுமா அல்லது அவை தனி மாந்தனின் சொந்த,பண்பாட்டு விழுமியங்களாலும் சமூக உறவுகளாலும் முடிவு செய்யப்படுகின்றனவா? என்ற தேடல் தொடர்கிறது.
அறிவியலையும் அதுசாராத அறிவையும் பிரித்துப் பார்த்தலே எல்லைபகுப்பு சிக்கலாகும். எடுத்துகாட்டாக உளப்பகுப்பாய்வை அறிவியலாகக் கருதமுடியுமா? அதேபோல, உப்பும் பலபுடவிக் கருதுகோள் அல்லது பருப்பொருளியல் ஆகியவை அறிவியற் புலங்களா? கார்ள் பாப்பெர் இதைத் தான் அறிவியலின் மெய்யியல் சார்ந்த மையக் கேள்வியாகும் என்றார். என்றாலும் இந்தச் சிக்கல் குறித்து மெய்யியலாரிடையே ஒருங்கிசைவான பொதுக் கருதேற்பு ஏதும் உருவாகவில்லை. சிலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. மற்றும் சிலரோ இதைத் தீர்க்கவொணாத தாகக் கருதுகின்றனர்.
ஏரண நேர்காட்சிவாதிகளின் தொடக்கநிலை முயற்சிகள் அறிவியலை நோக்கீட்டுத் தகவுடையது என்றும் அதுசாராத அறிவு நோக்கீட்டுக்கு அகப்படாதது என்றும் வரையறுத்தனர். இப்போது அது பொருட்படுத்தப்படுவதில்லை. பொய்ப்பித்தற் கோட்பாடு மட்டுமே அறிவியலின் மையப் பான்மை ஆகும் என பாப்பெர் வாதிடுகிறார். அதாவது, ஒவ்வொரு நேர்மையான அறிவியல் நிறுவலும் அது குறைந்தது கொள்கையளவிலேனும் பொய்ப்பிக்கப் படுதிறம் கொண்டிருக்கவேண்டும் என்கிறார்.
அறிவியலாக ஒப்பவைக்க, அறிவியல் போல பாவனைசெய்யும் கற்பனைத் துறையே போலிஅறிவியலாகும்.மற்றவழியில் இது தன்னை அறிவியலாக நிறுவிக்கொள்ள இயலாது. இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபீய்ன்மேன் "சரக்குப் பண்பாட்டு அறிவியல்" என்ற சொல்லை உருவாக்கினார்.இவர் இதில் சற்றும் உண்மையான நேர்மையேதுமின்றி தமது செயல்பாடுகள் மட்டும் அறிவியல் உருவாக்குவதாக நம்பவைக்கும் ஆய்வாளர்களின் ஆய்வு வகைகளைக் குறிக்கிறார். இவர்களது செயல்பாடுகளைச் சீரியவழிகளில் மதிப்பீடு செய்யவேண்டும் என்கிறார். உயர்வுநவிற்சி முதல் மோசடி வரையிலான வணிக விளம்பரங்களும் இதில் அடங்கும்.
இதோடு நெருங்கிய ஒரு கேள்வி நல்ல அறிவியல் விளக்கம் எது என்பதாகும். எதிர்கால நிகழ்ச்சிகளை முன்கணிப்பதோடு அறிவியல் கோட்பாடுகள் ஒழுங்காக நடக்கும் அல்லது நடந்தேறிய நிகழ்ச்சிகளுக்குச் சரியான விளக்கங்களைத் தரவேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்கிறது. அறிவியல் கோட்பாடு விளக்குந்திறனைப் பெற்றுள்ளது என்பதன் பொருளையும் ஒரு நிகழ்வை அறிவியல் கோட்பாடு வெற்றியுடன் விளக்கியதை முடிவுசெய்யும் வரன்முறைகளையும் மெய்யியலாளர்கள் புலனாய்வு செய்துள்ளனர்.
மிகப் பாரிய தாக்கத்தை விளைவித்த முதல் அறிவியல்விளக்க்க் கோட்பாடு Deductive-Nomological படிம்மாகும். இது ஓர் அறிவியல் விதியில் இருந்து கருதப்படும் நிகழ்வுக்கான முன்கணிப்பு கொணரப்படவேண்டும் எனக் கூறுகிறது. கோட்பாட்டுக்கான் பல மாறுபட்ட பரவலாக ஏற்கப்பட்ட எடுத்துகாட்டுகளைக் கூறி இவ்விளக்கம் கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று எந்தவொரு விதியில்இருந்தும் கொணரவியலாவண்ணம் வாய்ப்பியல்பு உடையதாகவும் அறிந்தவற்றில் இருந்து கொணரமுடியாமல் உள்ளபோதும் இத்தகைய விளக்கத்தின் பொருள் என்னவென்ற கேள்வி எழுகிறது. வெசுலி சால்மன் ஒரு நல்ல விளக்கம் விளக்கப்படும் விளைவுக்குப் புள்ளியியலாகப் பொருந்திவரும் படிமம் ஒன்றை உருவாக்கினார். மற்றும் பலர் நல்ல விளக்கத்தின் திறவுகோல் தனித்த நிகழ்வுகளை ஒன்றிணைப்பதிலோ அல்லது தக்க காரண இயங்கமைப்பைத் தருவதிலோ அமைகிறது என வாதிக்கின்றனர்.
எவ்வளவுதான் இயல்பானதாக அறிவியல் ஏற்கப்பட்டாலும், குறிப்பிட்ட பல எடுத்துகாட்டுகளில் இருந்து உருவாகும் பொதுக் கூற்றின் சரித்தன்மையை உய்த்தறிவதும் பல தொடராய்வுகளில் இருந்து கிடைக்கும் கோட்பாட்டின் மெய்ம்மையை உய்த்தறிவதும் சரியானதென தெளிவாக வரையறுக்க முடியவில்லை. எடுத்துகாட்டாக, ஓர் உழவன் கோழிக்கு 100 நாட்களுக்கு தொடர்ந்து தீனியை வரிசையாக காலையில் இடுவதைக் கோழி பார்க்கிறது. எனவே கோழி விரிநிலை ஏரணமுறைமையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் காலையில் வந்து உழவன் தீனி இடுவான் என உய்த்துணரலாம். என்றாலும் ஒருநாள் காலையில் வந்து உழவன் அதைக் கொல்கிறான். இந்த கோழியின் காரணமுறைமையைவிட அறிவியல் காரணமுறைமையை சரியானதாக எப்படி நம்பமுடியும்?
விரிநிலை ஏரண முறைமைக்கான எந்தவொரு வாதமும் வரன்முறைச் சிக்கலைத் தவிர்க்கவேண்டும் அதாவது உண்மையை நிறுவப் பயன்படும் எந்தவொரு நிறுவலும் தன்னளவிலது நிறுவப்படவேண்டும் என்ற தொடர்நிறுவல் சிக்கலைத் தவிர்க்கவேண்டும். இத்தொடர்நிறுவல் சிக்கலைத் தவிர்க்க நிறுவலைத் தள்ளிபோடும் வாதம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அடிப்படைவாதம்/அடிப்படைவாத முறைமையாகும். அடிப்படைவாதம் நிறுவல் தேவைப்படாத சில அடிப்படை உண்மைகள் உண்டு என்கிறது. விரிநிலை ஏரணம், பொய்ப்பித்தல் இரண்டுமே அடிப்படைவாதத்தின் வடிவங்களாகும். ஏனெனில் அவை இரண்டுமே உடனடி புலன்வழிப் பட்டறிவைச் சார்ந்த அடிப்படைக் கூற்றுகளை ஏற்கின்றன.
விரிநிலை ஏரணத்தை ஏற்கும் மற்றொருவாதமும் எடுபடாது. ஏனெனில் பொதுக் கூற்றுக்கான பல நோக்கீடுகள் குறைந்தது அதன் கூடுதலான நிகழ்தகவைத் தரலாமே ஒழிய, உண்மையை உறுதிப்படுத்த பயன்படாது. எனவே, ஒவ்வொருநாளும் காலையில் உழவன் வந்து உணவை இடுவான் என்ற கோழியின் முடிவை உறுதிப்படுத்த முடியாதென்றாலும், இது விரிநிலை ஏரணப்படி சரியே. என்றாலும், சில அரிய கேள்விகள் தொக்கிநிற்கும். பொதுக் கூற்றை நிறுவ, சான்றின் எவ்வளவிலான நிகழ்தகவு தேவைப்படும்?. இதில் இருந்து தப்பிக்க, ஒரேவழி அறிவியல் கோட்பாடுகள் சார்ந்த அனைத்து நம்பிக்கைகளும் பாயேசிய நிகழ்தகவினவே, அதாவது அகவயமானதே அல்லது தனியரைச் சார்ந்ததே என அறிவித்தலே ஆகும். சரியான காரணமுறைமை என்பது கால அடைவில் ஒருவரது அகவய நம்பிக்கையைச் சான்றுகள் எவ்வாறு மாற்றுகின்றன என்பதைச் சார்ந்ததே.
சிலர் அறிவியல் அறிஞர்கள் விரிநிலை ஏரணமுறைமையைப் பின்பற்றுவதில்லை; மாறாக, சிறந்த விளக்கத்துக்கான ஏரண முறையையே பின்பற்றுகின்றனர் என வாதிடுகின்றனர். இவ்விளக்கத்தின்படி, அறிவியல் குறிப்பிட்ட நேர்வுகளைப் பொதுமைபடுத்தாமல், நோக்கிடுகளுக்கான சிறந்த விளக்கத்தைத் தர்ரவல்ல கருதுகோள்களையே உருவாக்குகிறது. இங்கு சொல்லப்படும் சிறந்த விளக்கம் எது என்பது, முந்தைய பிரிவில் ஏற்கெனவே கூறியபடி, தெளிவாக அமைவதில்லை. இந்தச் சிக்கல் ஓக்காம் கூரலகுவழி விளக்கப்படுகிறது . ஓக்காம் கூரலகு, கிடைக்கும் எளிய விளக்கமே சிறந்த விளக்கமென வரையறுக்கிறது. இந்த அணுகுமுறையின் சிலவகைகளில் இது முதன்மையான பாத்திரம் வகிக்கிறது. இப்போது நாம் கோழி விளக்கத்துக்குத் திரும்புவோம்; கோழியை உழவன் கவனமாக பார்த்துக்கொள்கிறார் எனக் கருதுவதும் அவர் தொடர்ந்து வரம்பிலாது எப்போதும் கவனிப்பார் என்பதும் எளியதாக அமையுமா, அல்லது கொன்றுதின்னவே கொழுக்கவைக்கிறார் என்பது எளிமையாக அமையுமா ? மெய்யியலாளர்கள் இந்த உள்ளுணர்வு நெறிமுறையைப் பார்சிமனி அல்லது பிற அளவைமுறைகளால் கோட்பாட்டியலாக மேலும் எளிமையாக்க முயன்றுள்ளனர். பல எளிய அளவைகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் பொதுவாக ஏற்கப்பட்ட, கோட்பாடு சாராத எளிய அளவை ஏதும் இல்லை. அதாவது எத்தனை கோட்பாடுகள் உள்ளனவோ அத்தனை எளிய அளவைகள் அமைகின்றன. இந்நிலையில், கோட்பாடு தேர்வது எவ்வளவு அரியதோ அதே சிக்கலாக இந்த எளிமைகளில் ஒன்றைத் தேர்வதும் அமைகிறது.
நோக்கீடுகளுக்காக, அறிவியல் அறிஞர்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்துகின்றனர்; மின்னன்திரைப் படிமங்களைப் பயன்படுத்துகின்றனர்; அளவியின் அளவுகளைப் பதிவு செய்கின்றனர். பொதுவாக, அடிப்படை மட்டத்தில், அவர்கள் நோக்குவதை அவர்கள் ஒப்புக்கொள்ளலாம்,; எ.கா.,வெப்பநிலைமானி 37.9 பாகை C எனக் காட்டுவதை ஒப்புக்கொள்ளலாம். இவர்களே அடிப்படை நோக்கீடுகளை விளக்கும் வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்தால், அவர்கள் நோக்கும் அளவீடுகளை ஏற்க மறுப்பர். எடுத்துகாட்டாக, அய்ன்சுட்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டுக்கு முன்பு, நோக்கீட்டாளர்கள் இடதுபுறம் உள்ள படிமத்தை விண்வெளியில் அமைந்த ஐந்து வேறு பொருள்களாக விளக்குவர். பொதுச் சார்புக் கோட்பாட்டு வெளிச்சத்தில், இப்போது வானியலாளர்கள் உண்மையில் இரண்டு பொருள்களே உள்ளதாகவும், நடுவில் ஒருபொருளும் பக்கங்களில் அதன் நான்கு உருப்படிமங்கள் அமைவதாகவும் கூறுவர். மாறாக, வேறு அறிவியல் அறிஞர்கள் தொலைநோக்கியில் ஏதோ பிழை உள்ளது என்றும் நோக்குவது என்னவோ ஒரே பொருளே எனவும் கூறினால், அவர்கள் வேறொரு கோட்பாட்டினைப் பினபற்றுகிறார்கள் எனத் தெளியலாம். கோட்பாட்டு விளக்கத்தில் இருந்து பிரிக்க மிடியாத நோக்கீடு கோட்பாட்டுச்சுமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அனைத்து நோக்கீடும் புலன்காட்சியையும் அறிதல் நிகழ்வையும் சார்ந்தனவே. அதாவது, ஒருவர் வெறுமனே நோக்குவதில்லை; இவர் சூழ்ந்துள்ள புலன்தரும் தரவுகளுக்கு நடுவே, தான் கருதும் நிகழ்வை வேறுபடுத்தி, முனைப்போடு நோக்குகிறார். எனவே, நோக்கீடுகள் உலகம் எப்படி செயல்படுகிறது எனும் புரிதல் முறையாலும் இப்புரிதலால் விளையும் புலன்காட்சியாலும் புறக்காட்சியாலும் மாற்றமுறுவதைக் கருதவேண்டும். இந்தப் பொருளில், அனைத்து நோக்கீடும் கோட்பாட்டுநிலையைச் சார்ந்தனவாகவே கூறலாம்.
மேலும், பயன்படத்தக்கனவாக அமைய, பெரும்பாலான நோக்கீடுகள் கோட்பாட்டுச் சூழலிலேயே எடுக்கப்பட வேண்டும். எடுத்துகாட்டாக, ஒருவர் வெப்பநிலைமானியால் வெப்பநிலை உயர்வை அளக்கும்போது, இந்நோக்கிடு வெப்பநிலையின் தன்மை, அதை அளக்கும் வழிமுறை, வெப்பநிலைமானியின் செயல்பாடு ஆகியவற்றின் புரிதலோடே எடுக்கப்படுகிறது. அறிவியலாகப் பயன்படும் நோக்கிடுகளை எடுக்க, இத்தகைய புரிதல் இன்றியமையாததாகும்.
அறிவியல் அறுதி மெய்ம்மையைக் காணல் வேண்டுமா, அறிவியலால் விடைதர முடியாத கேள்விகளும் உண்டா?. இதற்கு, அறிவியல் சார் நடப்பியல்வாதிகள் அறிவியலின் நோகம் உண்மை நாடலே; அறிவியல் கோட்பாடுகலை ஒருவர் உண்மையானவையாக, தோராய உண்மை வாய்ந்தனவாக, உண்மை நிகழ்வொத்ததாகவே கருதவேண்டும் எனக் கூறுகின்றனர். மாறாக, அறிவியல்சார் எதிர்நடப்பியல்வாதிகள் அறிவியல் உண்மையை நோக்கியதல்ல, (குறைந்தது வெற்றிகரமாக உண்மையைத் தருவதில்லை) குறிப்பாக நோக்கவியலாவையான மின்னன்கள், புடவிப் பகுதி பற்றிய உண்மையைத் தரவியலாத்து என வாதிடுகின்றனர். கருவிவாத மெய்யியலாளர்கள் அவற்றின் பயந்த்ரு தகவை வைத்தே அறிவியல் கோட்பாடுகளை மதிப்பிடவேண்டும் என வாதிடுகின்றனர். இவர்களது கண்ணோட்ட்த்தில், கோட்பாடுகள் உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது முதன்மையானதன்று. ஏனெனில், அறிவியலின் நோக்கமே திறமான தொழில்நுட்பத்தை வடிவமைக்க தேவைப்படும் முன்கணிப்புகளைத் தருவதே என வாதிடுகின்றனர். நடப்பியல்வாத மெய்யியலாளர்கள் அண்மைக் கோட்பாடுகளின் உண்மை அல்லது அணுக்கமான உண்மைக்கான சான்றை, அறிவியல் கோட்பாடுகளின் வெற்றிக்குச் சுட்டிக் காட்டுகின்றனர். எதிர்நடப்பியல்வாதிகள் அறிவியல் வரலாற்றில் அமையும் பொய்க்கோட்பாடுகளையோ அறிதலியல்சார் அறங்களையோ, பொய்ப்பிக்கப்பட்ட அறிவியல் படிமங்களின் கற்பிதங்களையோ, அல்லது பின்னைப் புத்தியல்வாதத்தில் பரவலாக வாதமிடும் அறிவியல் நடப்புக்குச் சான்றாக புறநிலையைக் கருதக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டியோ வாதிடுகின்றனர். இவர்கல் உண்மையைக் கருதாமல், அறிவியல் கோட்பாடுகளின் வெற்றியை விளக்குகின்றனர். நடப்பியல் எதிர்ப்பு மெய்யியலாளர்கள் நோக்கவியன்ற பொருள்களின் துல்லியத்தையே அறிவியல் கோட்பாடுகள் நோக்கமாகக் கொள்கின்றன; இந்த வரன்முறையை வைத்தே அவற்றின் வெற்றிகளை மதிப்பிடுகின்றனர் என வாதிடுகின்றனர்.
அறிவியல் என்பது என்ன, அறிவியல் கோட்பாடுகலை நிறுவும் செயல்முறை எப்படி வேலை செய்கிறது, அறிவியலின் நோக்கம்தான் என்ன ஆகியவை தெளிவற்றவையாகவே விளங்குகின்றன. மேலும் அறிவியலின் உருவாக்கத்தில் விழுமியங்களுக்கும் பிற சமூகத் தாக்கங்களுக்கும் கணிசமான பங்குண்டு. உண்மையில், தனியரின் சொந்த, பண்பாட்டு விழுமியங்கள், எந்த ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செயவது, எந்தக் கோட்பாடுகள் அறிவியல் பொதுக் கருத்தேற்பைத் தரும் எனத் தேர்வு செய்வதில் பங்காற்றுகின்றன. பெண்ணியம் சார்ந்த அறிவியலின் மெய்யியலாளர்களும் அறிவியலின் சமூகவியலாளர்களும் சமூக விழுமியங்கள் அறிவியலை வடிவமைக்கின்றன என்பதில் அக்கறையோடு பணியாற்றுகின்றனர்.
அறிவியலின் மெய்யியல் பிளாட்டோ, அரிசுடாட்டில் காலத்திலேயே தொடங்கிவிட்டது. இவர்கள் தோராய காரணமுறைமையையும் சரியான காரணமுறைமையையும் வேறுபடுத்தினர்; காரணமுறைமைகளின் மூவகைகளாகிய சிறந்த விளக்க முறைமை, பகுமுறை காரணமுறைமை, விரிநிலை அல்லது தொகுமுறை காரணமுறைமை ஆகியவற்றை உருவாக்கினர்; அவர்கள் உருவகக் காரணமுறைமையையும் பகுப்பாய்வு செய்தனர். பதினொறாம் நூற்றாண்டில் பலதுறை வல்லுனராகிய இபின் அல்-காய்தம் (இலத்தீனில் அல்காசென் எனப்பட்டவர்) தனது ஒளியியல் ஆராய்ச்சியைக் கட்டுபடுத்திய செய்முறைகளின் வழியாக மேற்கொண்டார். இதை அல்-லிதிபர் எனும் அரபுச் சொல்லால் குறிப்பிட்டார். இதில் இவர் வடிவியல் ஆய்வுகளால் வழிபடுத்தப்பட்டார். குறிப்பாக, catoptrics, dioptrics ஆய்வுகள் மிகவும் குறிப்பிட்த்தக்கவை. பரணிடப்பட்டது 2016-08-03 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2014-10-19 at the வந்தவழி இயந்திரம் பிரான்சிசுவகை உரோமக் கத்தோலிக்கத் துறவியும் ஆங்கிலேயச் சிந்தனயாளரும் செய்முறையாளரும் ஆகிய உரோசர் பேக்கன் (1214–1294) பலராலும் புத்தியல் அறிவியல் முறையின் தந்தையாக்க் கருதப்படுகிறார். இயற்கை மெய்யியலைப் புரிந்துகொள்ள கணிதவியல் மிகவும் இன்றியமையாததாகும் எனும் இவரது கண்ணோட்டம் அவரது காலத்தில் 400 ஆண்டுகள் முன்னோடியானதாகும் எனக் கருதப்படுகிறது.
அறிவியலின் புத்தியற் காலத்து அறிவியல் புரட்சியின்போது, பிரான்சிசு பேக்கன் முதன்மையான அறிவியல் ஆளுமையாக விளங்கினார். Novum Organum (1620) எனும் தனது நூலில் (அரிசுடாட்டிலின் Organon நூல் சார்ந்து பெயரிடப்பட்ட நூலில்) புது ஏரண முறையை பழைய முக்கூற்று ஏரணம் எனும் மெய்யியல் அளவைமுறையை மேம்படுத்த அறிமுகப்படுத்தினார். பேக்கனின் முறை மாற்றுக் கோட்பாடுகளைத் தவிர்க்க, செய்முறைகளின் வரலாறுகளைச் சார்ந்து அமைந்தது. பின்னர், 1637 இல் இரெனே தெ கார்த்தே முறை குறித்த உரையாடல் (Discourse on Method) எனும் தன் நூலில் அறிவியல் முறைக்கான வழிகாட்டி நெறிமுறைகளுக்கான புதிய சட்டகத்தைப் பகுத்தறிவியத்தைச் சார்ந்து நிறுவினார். அல்காசென், பேக்கன், தெ கார்த்தே ஆகியவர்களின் எழுத்துகள் புத்தியல் அறிவியல் முறையின் வளர்ச்சியில், ஜான் இசுட்டூவர்ட் மில்லினதைப் போலவே, உய்யநிலைப் பாத்திரம் வகிப்பதாகக் கருதப்படுகிறது. டேவிடு கியூம் எனும் மெய்யியலாளர், அறிவியலின் காரணமுடைமையைத் தீர்மானிக்கும் திறமை பற்றிய ஐயுறவை முன்வைத்து, விரிமுறை ஏரணச் சிக்கல் பற்றிய வரம்புடைமையை விளக்கினார்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், இயற்பியலாளரிடையே கருவிவாதம் பரவலாக ஆட்சி செலுத்தியது; பின்னர், பல பத்தாண்டுகளுக்கு ஏரண நேர்காட்சிவாதம் இப்புலத்தை வரையறுத்து கோலோச்சியது. நேர்காட்சிவாதம் ஓர்வியன்ற கூற்றுகளை மட்டுமே பொருள் உள்ளனவாக ஏற்று, மீவியற்பியல் விளக்கங்களைப் புறந்தள்ளி, ஏரணவியலையும் புலன்சார் பட்டறிவு வத்த்தையும் மொழியியலையும் இணைக்கும், நிறுவுமைவாத அடிப்படையில் (அறிவியல் கோட்பாடு அல்லது அறிதலியல் விதிமுறைகளைன்படி), பட்டறிவுசார் அறிவியல் புலங்களின் எடுத்துகாட்டுகளுக்குப் பொருந்துமாறு மெய்யியலை நிறுவிட முனைந்தது. இம்முறைப்படி, ஒட்டுமொத்த மெய்யியலையுமே புதிய அறிவியல்சார் மெய்யியலாக மாற்றுவதாக பறைசாற்றி, பெர்லின் வட்டமும் வியன்னா வட்டமும் 1920 களின் பின்கட்டத்தில் ஏரண நேர்காட்சிவாதத்தை முன்வைத்தன.
உலூத்விக் விட்கன்சுட்டீனின் தொடக்கநிலை மொழியின் மெய்யியலை விளக்கும் முகமாக, ஏரண நேர்காட்சியாளர்கள் நிறுவல் நெறிமுறையை அல்லது அறிதல்சார் பொருளுடைமைக்கான வரன்முறையை இனங்கண்டனர். இவர்கள் பெர்ட்டிரேண்டு இரசலின் ஏரணவியத்தில் (logicism) இருந்து கணிதவியலை ஏரணவியலாகக் குறைக்கும் வழிமுறையை வந்தடைந்தனர். மேலும், இவர்கள் இரசலின் ஏரண அணுவாதத்தையும் எர்னெசுட்டு மேக்கின் தோற்றநிகழ்வியத்தையும் ஏற்று, அதன்வழியாக, மனம் என்பது புலன் பட்டறிவு வாயிலாக பெறவல்லதை மட்டுமே அறிகிறது எனவும் இயற்பியலாயினும்சரி அல்லது உளவியலாயினும் சரி அனைத்து அறிவியல் புலங்களின் உள்ளடக்கமும் இதுவே எனவும் கொண்டதோடு, பெர்சி பிரிட்ஜ்மேனின் செயல்நெறிவாதத்தையும் (operationalism) ஏற்றனர். எனவே நிறுவமுடிந்ததே அறிவியலானதும் அறிதல்சார் பொருளுடையதும் ஆகும்; நிறுவ இயலாதது அறிவியல் தன்மையற்றதும் அறிதல்சார் பொருளற்றதும் ஆகும்; மீவியற்பியலான அல்லது உணர்ச்சிவயமான அல்லது இவை போன்ற போலிக் கூற்றுகள், புதிய அறிவை வளர்ப்பதைவிட அதை ஒருங்கமைப்பதில் மட்டும் ஈடுபடும், பயில்நிலை மெய்யியலாரின் மேலாய்வுக்கு உரியவையாகும் என வாதிட்டனர்.
ஏரண நேர்காட்சிவாதம். அதன் சீரிய அறிவியல்சார் எதிர்நடப்பியல் வாதத்தாலேயே பெயர்பெற்றது. இது அறிவியல் நோக்கவியலாதனவற்றைப் பேசுவதை மறுத்ததோடு, காரணமுடைமை, இயங்கமைப்பு, நெறிமுறைகள், ஆகிய அறிவியல் கருத்தினங்களையும் மறுத்தது. இருந்தாலும் இத்தகைய நோக்கவியலாதவற்றை உருவகங்களாகவோ நுண்ணிலையான நேரடி நோக்கீடுகளாகவோ அல்லது மீவியற்பியலானதாகவோ உணர்ச்சிவயமானதாகவோ கருதியது. கோட்பாட்டு விதிகளைப் புலன்சார் விதிகளாக குறைத்தது; கோட்பாட்டு கலைச்சொற்கள் தம் பொருளை நோக்கீட்டுச் சொற்களில் இருந்து ஒப்புடைமை விதிகள் வாயிலாகவே பெறுவதாகக் கருதியது; இயற்பியலில் அமையும் கணிதவியலை, ஏரணவியம் வழியாக குறியீட்டு ஏரணவியலாகக் குறுக்கியது;. இதன் பகுத்தறிவுசார் மீளாக்கம் இயற்கை மொழியைச் செந்தரக் குறியீட்டுச் சமன்களால் மாற்றியது. இவை அனைத்துமே வலைப்பின்னலாக ஏரணத் தொடரன்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. அறிவியல் கோட்பாடு அதன் நிறுவல் முறையால் கூறப்பட்டது. இங்கு, இதனுடைய ஏரணக் கலனம் அல்லது புலன்சார் செயல்நெறிவாதம் உண்மையையோ பொய்ப்பிப்பையோ நிறுவியது.
1930 களின் பின்கட்டத்தில், ஏரண நேர்காட்சிவாதிகள் செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்தனர். அதற்குள், பலர் மேக்கின் தோற்றநிகழ்வியலை இருந்து ஆட்டோ நியூரத்தின் புறநிலைவாதத்தால் பதிலீடு செய்யலாயினர். மேலும் உருடோல்ப்பு கார்னாப் நிறுவுதல் எனும் சொல்லை உறுதிபடுத்தல் எனும் எளிய சொல்லால் பதிலீடு செய்தார். 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடியுந்தறுவாயில், ஏரண நேர்காட்சிவாதம் நீர்த்துப் போய், கார்ல் கெம்பெலின் முயற்சியால் ஏரண புலன்சார் வாதம் ஆகியது. இவர் அமெரிக்காவில், ஐயப்பாடான காரணமுடைமையை மேற்கோளாக காட்டாமலே, விளக்கங்களுக்கான ஏரண வடிவத்தை இனங்காண்பதற்கு இணையாக, அறிவியல் விளக்கங்களுக்கான விதிசார் படிமத்தை முன்வைத்தார். ஏரண நேர்காட்சிவாத இயக்கம் பகுப்பாய்வு மெய்யியலின் முதுகெலும்பாக மாறி, ஆங்கிலேய மெய்யியலையும் அறிவியலின் மெய்யியலையும் ஏன், 1960 களில் இருந்து அறிவியல் புலங்களையும் கூட கோலோச்சியது. என்றாலும் இவ்வியக்கம் தனது மையச் சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதோடு, அதன் நெறிமுறைகளும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின. என்றாலும், அறிவியலின் மெய்யியலை மெய்யியலின் முதன்மை வாய்ந்த உட்பிரிவாக இவ்வியக்கம் முன்னிறுத்தியது. இதில் கார்ல் கெம்பெல் முதன்மைப் பாத்திரம் வகித்தார்.
தாமசு குஃன் 1962 இல் வெளியிட்ட அறிவியல் புரட்சிகளின் கட்டமைப்பு எனும் நூலில், ஏரண நேர்காட்சிவாதத்துக்கான எதிர்வினையைத் தெளிவாக அறிவித்தார். இவர் நோக்கிடு, மதிப்பீட்டு நிகழ்வு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்துக்குள் நிகழ்வதாக வாதிட்டார். சிந்தனைச் சட்டகம் என இவர் குறிப்பிடும் சொல்லின் சாரம் உலகின் ஏரணவியலாக உருவகப்படுத்தப்படும் காட்சிப் படிமம் ஆகும்; இதில் ஏரண முரண்பாடுகள் அமையாது; இக்கண்ணோட்டத்தில் இருந்து செய்யும் நோக்கீடுகள் இக்காட்சிப் படிமத்துக்குப் பொருத்தமாக அமையும். இந்தச் சட்டகத்துக்குள் அமையும் நோக்கீடு, புதிர் விடுவிப்பு நிகழ்வே இயல்பான அறிவியல் ஆகும் என விளக்கினார். மேலும், இவர் ஒரு சிந்தனைச் சட்டகம் மற்றொன்றைக் கடந்து முந்திச் செல்லலாம் என்பதை விளக்கி, இந்நிகழ்வு சிந்தனைச் சட்டகப் பெயர்வு எனப் பெயரிட்டு விளக்கினார்.
ஓர்வுக்கு உட்படுத்தும் கருதுகோளை, எப்போதுமே நோக்கீடுகளை மேற்கொள்ள பயன்ப்டும் கோட்பாட்டின் தாக்கத்தில் இருந்து பிரித்தல் இயலும் என்பதை குஃன் மறுத்தார்; மேலும் அவர் சமவல்லமையுள்ள சிந்தனைச் சட்டகங்களைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யமுடியாதென வாதிட்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட ஏரணப் பொருத்தம் உள்ள உலக உருவாக்கம், பயன்படுத்த முடிந்த ஒப்புமையைத் தருமே ஒழிய, அவற்றில் இரண்டு காட்சிகளை ஒன்றையொன்று எதிர்க்கும் அல்லது ஒரு கோட்பாடு மற்றொரு கோட்பாட்டை எதிர்க்கும் வாய்ப்புக்கான பொது அடிப்படை ஏதும் கிடையாது எனவும் அதேபோல, ஒன்றை வைத்து மற்றொன்றை மதிப்பீடு செய்யும் செந்தரமாக ஏதும் அமையாது எனவும் எனவே, அறிவியல் முன்னேற்றத்தை அளக்கும் வழிமுறை ஏது கிடையாது எனவும் வாதிட்டார்.
குஃன்னைப் பொறுத்த்வரையில், சிந்தனைச் சட்டகத் தேர்வு ஏரண நிகழ்வுகளால் நிலைநிறுத்தப்படுகிறதே ஒழிய, அதனால் அறுதியாகத் தீர்மானிக்கப்படுவதில்லை. தனியரின் சிந்தனைச் சட்டகத் தேர்வு பின்வருமாறு அமையும். அவர் முதலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலக உருவகப்படங்களை உருவாக்கி, பிறகு இவற்றில் இதில் எது குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தோடு கூடுதலாகப் பொருந்திப் போகிறதோ அந்தச் சிந்தனைச் சட்டகத்தை அவர் தேர்வு செய்வார். ஒரு சிந்தனைச் சட்டகம் பொதுவாக ஏற்கப்பட்டால் அதற்கு அறிவியல் சமூகத்தின் பொதுக் கருத்தேற்பைக் குறிப்பதாக கொள்கிறார். குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தை ஏற்பதும் மறுப்பதும் சமூக நிகழ்வாலும் ஏரண நிகழ்வாலும் ஏற்படுவதாகும் என வாதிடுகிறார். என்றாலும், குஃன்னின் இந்த நிலைப்பாடு, சார்புடைமை வாதமல்ல. குஃன்னின் கண்ணோட்டத்தில், பழைய சட்டகத்தின்படி, கணிசமாக நோக்கீட்டுப் பிறழ்வுகள் அமைந்து, புதிய சட்டகம் தேவைப்படுகையில், சட்டகப் பெயர்ச்சி ஏற்படுகிறது. அதாவது நோக்கீடுகள் பழைய சட்டகப் பின்னணியிலேயே எடுக்கப்பட்டாலும், அந்நோக்கீடுகள் வழியாகவே புதிய சட்டகம் தேர்வு செய்யப்படுகிறது.
முதன்மைக் கட்டுரை:சமூக அறிவியலின் மெய்யியல்
சமூக அறிவியலின் மெய்யியல்என்பது சமூகவியல், மானுடவியல் அல்லது மாந்தரினவியல், அரசியலியல் போன்ர சமூக அறிவியல் புலங்களின் முறைகளையும் ஏரணத்தையும் கருப்பொருளாகக் கொண்டதாகும். சமூக அறிவியலின் மெய்யியலாளர்கள் சமூக அறிவியல் புலங்களுக்கும் இயர்கை அறிவியல் புலங்களுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் பொருட்படுத்தி, சமூக நிகழ்வு, வாய்ப்புள்ள சமூக விதிகள் ஆகியவற்றுக்கும் சமூகக் கட்டமைப்பு, முகமைகளுக்கும் இடையே நிலவும் இருப்பியல் அல்லது நிலவுகையியல் உறவுகளைக் கவனத்தில் கொள்கின்றனர்.
பிரெஞ்சு மெய்யியலாளர், அகசுதே காம்தே (1798–1857), நேர்காட்சிவாத அறிதல்முறையியல் கண்ணோட்டத்தை நேர்காட்சி மெய்யியலின் வழித்தடம் எனும் நூலில் நிறுவினார். இந்நூல் 1830 முதல்1842 வரையில் பல பனுவல்களாக வெளியிடப்பட்டது. வழித்தடம் முதல் மூன்று தொகுதிகள் முதன்மையாக அப்போது நிலவிய இயற்கை அறிவியல் புலங்களான கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றைப் பற்றி விளக்கியது. இவற்றின் பிந்தைய இருபுலங்கள் சமுகவியலின் வருங்கால வரவைக் கட்டியங் கூறின.". காம்தேவின் கருதல்படி, மாந்தரின் சமூகம் பற்றிய அறிகூவல்மிக்க, சிக்கலான சமூகவியலுக்கு முன் இயற்கை அறிவியல்கள் உருவாதல் கட்டாயமாகும். இவர் சமூகத்தின் மூன்று படிமலர்ச்சி கட்டங்கலைக் குறிப்பிடுகிறார் இது 'முக்கட்ட விதி' எனப்படுகிரது. இவர் க்குறும் சமூக வலர்ச்சியின் மூன்று கட்டங்களாவன:(1) இறையியல் கட்டம், (2) the மெய்யியல் கட்டம், and (3) நேர்காட்சிக்கட்டம்.
காம்தேவின் நேர்காட்சியியல் அல்லது நேர்காட்சிநெறி முறைசார் சமூகவியல், சமூகவியல் ஆராய்ச்சிக்கான தொடக்கநிலை மெய்யியல் அடிப்படைகளை நிறுவியது. தர்கீம், மார்க்சு, மாக்சு வெபெர் ஆகியோர் நிகழ்கால சமூக அறிவியலின் தந்தையராகப் போற்றப்படுகின்றனர். உளவியலில், நேர்காட்சிநெறி வரலாற்றியலாகப் பேணப்படும் நடத்தையியல்வாதம் அல்லது நெறியில் அமைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் வழியிலான சமூக முன்னேற்றம் தவிர்க்கவியலாத விளைவாகும் எனக் கருதும் தொழிநுட்பவியல் அறிஞர்களும் நேர்காட்சிநெறி வழியினரே.
நேர்காட்சிவாதம் நெருக்கமாக அறிவியல்வாதத்தோடு பின்னிப்பிணைந்ததாகும்;இது இயற்கை அறிவியல் அறிவையும் முறைகளையும் மெய்யியல், சமூக அறிவியல், பிற அனைத்து துறைகளின் உசாவலுக்கும் பயன்படுத்தலாம் எனக் கருதுகிறது. பெரும்பாலான சமூகவியல் அறிஞர்களும் வரலாற்றியலாளர்களும் மரபான நேர்காட்சிநெறியைப் பின்பற்றுவதில்லை. இன்று, சமூக, இயற்கை அறிவியல் அறிஞர்கள் நடைமுறையில் நோக்கீட்டாளர் சார்புநிலை, சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றின் பிறழ்நிலை விளைவுகளைக் கவனத்தில் கொள்கின்றனர். இத்தகைய ஐயுறவுநெறி, தாமசு குஃன், புதிய மெய்யியல் இயக்கங்களான உய்யநிலை நடப்புநெறி அல்லது ந்டப்பியல், புதுப்பயன்முறைநெறி ஆகியவற்றின் அறிவியல் சார்ந்த கொணர்வுமுறையைப் பொதுவாக வலுவிழக்கச் செய்கிறது. மெய்யியல்சார் சமூகவியலாளரான யூர்கென் ஏபர்மாசு தூய கருவிசார் பகுத்தறிவு நெறியைப் பின்பற்ரும் அறிவியல் சிந்தனை கருத்தியலுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறதென வாதிடுகிரார்.
The upshot is that the positivists seem caught between insisting on the V.C. —but for no defensible reason—or admitting that the V.C. requires a background language, etc., which opens the door to relativism, etc. In light of this dilemma, many folk—especially following Popper's "last-ditch" effort to "save" empiricism/positivism/realism with the falsifiability criterion—have agreed that positivism is a dead-end.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)