இரண்டாம் உலகப் போரின் அச்சு நாட்டுத் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் முக்கிய அரசியல் படைத்துறை நபர்களாக விளங்கினர். 1940 ஆம் ஆண்டின் முத்தரப்பு உடன்படிக்கை மூலம் அச்சு நாடுகளுகிடையான அணி உருவாக்கப்பட்டது. இத்தலைவர்கள் தீவிர படைத்துறை, தேசியவாத, பொதுவுடமை-எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல அச்சு தலைவர்கள் நரென்பேர்க் நீதி விசாரனைகளின் போது போர் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.