கபிரியேல் | |
---|---|
அதிதூதர் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் |
திருவிழா | செப்டம்பர் 29 (தூய மிக்கேல் மற்றும் தூய ரபேலோடு சேர்ந்து) மரபு வழி திருச்சபைகளில்: நவம்பர் 8 |
கபிரியேல் (எபிரேயம்:גַּבְרִיאֵל, இறைவன் என் பலம்; அரபு மொழி: جبريل, Jibrīl or جبرائيل Jibrāʾīl) என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.
இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறித்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.
இசுலாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குர்ஆன் குறிப்பிடுகின்றது. இவர் இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய நம்பிக்கையில் இவர் தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனித குர்ஆன் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது எனபது இசுலாமிய நம்பிக்கை.
சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களுக்கு கொண்டு செல்பவர் எனபது பஹாய் நம்பிக்கை.