குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பருவத்தில் இருந்து முதிர் அகவையர் ஆகும் வரை ஒரு பிள்ளைக்கு உடல், உணர்வு, சமூக மற்றும் அறிவார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதும், ஆதரவளிப்பதும் ஆகும். உயிரியல்பூர்வ உறவு தவிர ஒரு குழந்தையை வளர்க்கும் அம்சங்களை இது குறிப்பிடுகிறது.
வளர்ப்பில் மிக முக்கிய பொறுப்பாளர் குழந்தையின் உயிரியல்பூர்வ பெற்றோர் ஆவர். எனினும் மற்றவர்கள் ஒரு மூத்த உடன்பிறந்தவர், ஒரு தாத்தா, ஒரு பாதுகாவலர், அத்தை, மாமா அல்லது மற்ற குடும்ப உறுப்பினர், அல்லது ஒரு குடும்ப நண்பர் ஆக இருக்கலாம். குழந்தை வளர்ப்பில் அரசாங்கங்களும் சமூகமும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம். அநேக சந்தர்ப்பங்களில், அனாதையான அல்லது கைவிடப்பட்ட பிள்ளைகள் பெற்றோர் அல்லாத உறவினர்களிடமிருந்து பெற்றோரின் கவனிப்பைப் பெறுகின்றனர். மற்றவர்கள் தத்தெடுத்துக் கொள்ளப்படலாம், வளர்ப்புக் கவனிப்பில் வளர்க்கப்படலாம், அல்லது ஒரு அனாதை இல்லத்தில் வைக்கப்படலாம். பெற்றோரின் திறன்கள் மாறுபடுகின்றன. நல்ல வளர்ப்புத் திறனுடைய பெற்றோர் ஒரு நல்ல பெற்றோராகக் குறிப்பிடப்படலாம்.