கெத்சமனி அல்லது கெத்சமனே (Gethsemane; கிரேக்கம்: Γεθσημανή, எபிரேயம்: גת שמנים, Classical Syriac: ܓܕܣܡܢ, பொருள்" "எண்ணெய் ஆலை") எருசலேமிலுள்ள ஒலிவ மலை அடியில் காணப்படும் ஒரு தோட்டமாகும். இங்கு இயேசு கிறித்து வேண்டுதல் செய்ததாலும் இயேசுவின் சாவுக்கு முன் இயேசுவின் சீடர்கள் நித்திரை செய்ததாலும் முக்கியத்துவம் பெறுகிறது.
கெத்சமனி (Γεθσημανή) என்பது மத்தேயு நற்செய்தியிலும் மாற்கு நற்செய்தியிலும் கிரேக்க மொழியிலும் காணப்படுகிறது. இப்பெயர் அரமேயம் (ܓܕܣܡܢ, Gaḏ-Šmānê; கட் ஸ்மானே) மூலம், "எண்ணெய் ஆலை" என்ற பொருளில் இருந்து வந்தது. மத்தேயு (26:36), மாற்கு (14:32) இடம் அல்லது பண்ணை (χωρἰον; 18:1) எனக் குறிப்பிடுகின்றன.யோவான் நற்செய்தி இயேசு தோட்டத்திற்கு (κῆπος) அவருடைய சீடர்களோடு சென்றார் எனக் குறிப்பிடுகிறது.