சங்கம் (Sangha),) என்பது பாளி மற்றும் சமசுகிருதச் சொல் ஆகும். பௌத்த சமயத்தில் சங்கம் என்பதற்கு பிக்குகள் பௌத்த மெய்யியலை மறு ஆய்வு செய்தவதற்கும் மற்றும் வாழ்வியல் முறைகளை ஒழுங்குபடுத்த ஒன்று கூடும் இடமாகும்.
ஞானத்தின் நான்கு நிலைகளில் ஒன்றையோ அல்லது அனைத்தையோ அடைய விரும்பும் பிக்குகள் அல்லது பிக்குணிகள் அல்லாத பௌத்த சமயத்தை பின்பற்றும் மக்களை உபாசகர்கள் என்பர். தேரவாத பௌத்தம், உபாசகர்களை, சங்கத்தின் அங்கமாக கருதுவதில்லை.
பௌத்த சமயத்தை பின்பற்றும் அனைவரையும் சங்கத்தின் உறுப்பினர்கள் என மகாயான பௌத்தம் கூறுகிறது. ஆனால் தேரவாத பௌத்தமோ, பௌத்த சமயத்தை பின்பற்றும், பிக்குகள் அல்லது பிக்குணிகள் அல்லாத பௌத்த சமூகத்தினரை பரிசத் என்று குறிப்பிடுகிறது. பாளி மொழியானது, சங்கம் என்பதற்கு மேலோர் கூடுமிடம் என்று குறிப்பிடுகிறது.
புத்தம் மற்றும் தர்மத்திற்கு அடுத்ததான சங்கம், பௌத்த சமயத்தின் சாத்திரமான திரிபிடகத்தின் மூன்றாவதாகும். .
சங்கம் என்ற அமைப்பு முதன் முதலில் கௌதம புத்தர் கிமு 5ம் நூற்றாண்டில் நிறுவினார். சங்கத்தில் பயிலும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள், உலக ஈடுபாடுகளிலிருந்து விலகி, எப்பொறுப்பும், கட்டுப்பாடுகள் இன்றி, முழுநேரம் உயர் ஒழுக்கத்துடன் புத்தத்தன்மை அடைவதற்கு பயிற்சி புரியும் இடமாக இருந்தது. சாதாரன உலகியல் வாழ்வு வாழும் பௌத்த சமூகத்தவர்களுக்கு, சங்கம் எனும் அமைப்பு புத்தரின் அறவுரைகளை எடுத்துக் கூறவும், ஆன்மீக உதவிக்கும் பெரும் பங்காற்றுகிறது.
வரலாற்று காலத்தில் பௌத்த சமயத்தை மக்களிடையே பரப்பவும், வழிபாட்டுத் தலமாகவும், கல்விக் கூடமாகவும் சங்கம் செயல்பட்டது. மேலும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் பௌத்த சாத்திரங்கள் பயிலவும், ஜெபம், தவம், தியானம் செய்யும் இடமாகவும் சங்கம் அமைந்தது.
{{cite book}}
: Invalid |ref=harv
(help)
{{cite book}}
: |first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)