சுபாசு சந்திரா | |
---|---|
சுபாசு சந்திரா | |
மாநிலங்களவை உறுப்பினர் (அரியானா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகஸ்டு 2, 2016 | |
முன்னையவர் | சுரேஷ் பிரபு, BJP |
தொகுதி | அரியானா மாநிலம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 நவம்பர் 1950 ஹிசார் மாவட்டம், அரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வாழிடம்(s) | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
வேலை | எஸ்செல் குழும நிறுவனர் & தலைவர் |
அறியப்படுவது | ஊடக உரிமையாளர் |
சுபாசு சந்திரா (Subhash Chandra 30, நவம்பர் 1950) என்பவர் இந்திய ஊடகப் பெரும் தொழிலதிபர் ஆவார். எஸ்செல் என்னும் குழுமத்தின் தலைவர். ஜீ தொலைக் காட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தவர்.
அரியானா மாநிலத்தில் பிறந்த இவர். ஜீ தொலைக்காட்சி நிறுவனத்தை 1992 இல் தொடங்கினார். உல்லாசப் பூங்காக்கள், லாட்டரி சீட்டுகள், திரைப்பட அரங்குகள் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டார் 2009 இல் டிஎன்ஏ என்ற செய்தித்தாளையும் தொடங்கினார். 2016 சூன் திங்களில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றார். தன்வரலாறு நூலை சுபாசு சந்திரா எழுதியுள்ளார். இந்நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது, கனடா இந்திய அறக்கட்டளை வழங்கிய சான்சலனி குளோபல் இந்தியன் விருது ஆகியனவும் இவருக்குக் கிடைத்தன.