செவாலியே (பிரெஞ்சு மொழி: Chevalier) என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும்.
செவாலியே என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய ஒரு விருது பெற்றவரைக் காணும் போது தலை தாழ்த்தி வணங்கி சேர் அல்லது மேடம் என்று அழைக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
செவாலியே விருது பெற்ற தமிழர்கள்
கண்ணன் சுந்தரம், (காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பக பணிகளுக்காக)
அஞ்சலி கோபாலன், (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)