இரவு வேளைகளில் தெருவைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக தெருவுக்கு இடப்படும் விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீதி விளக்குகள் எனப்படும். வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டின் வாயிலில் சிலவேளைகளில் விளக்குகளைப் பொருத்துவர். ஆயினும் பொதுவாக கிராமாட்சி மன்றங்கள், மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் இத்தகைய வீதி விளக்குகளைப் பராமரிக்கின்றன.