நாசிஜெர்மனியின் நிபந்தனையற்ற சரண் முக்கிய தீர்மானமாக எடுக்கப்பட்டது. போரின் பின்னர் ஜெர்மனி மூன்று கைப்பற்றப்பட்ட பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு பேர்லின் நகரம் மூன்று பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பது.
பிரிக்கப்பட்ட ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில்பிரான்சுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்படலாம் என ஸ்டாலின் ஒப்புக்கொண்டார்.
ஜேர்மனிய இராணுவமற்ற மற்றும் நாசிகளற்ற நாடாக ஆக்குவது.
ஜேர்மனியின் போர்க்கால செப்பனிடல் கட்டாயத் தொழில் மூலம் அமுல் படுத்துவதில்லை.
போலந்து பற்றியும் விவாதிக்கப்பட்டது. அக்காலத்தில் போலந்து செம்படையினால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தமையினால் போலந்தின் கம்யூனிச அரசை திருத்தியமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
ஐநாவில் ஸ்டாலின் இணைவாதற்கு ஸ்டாலினின் ஒப்புதல் எடுக்கப்பட்டது. ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜெர்மனியைத் தோற்கடித்த பின்னர் 90 நாட்களில் ஜப்பானுக்கு எதிராகப் போரில் இறங்க ஸ்டாலின் ஒப்புக் கொண்டார்.
ஜேர்மனியின் பிரிப்பு பற்றி ஆராய்வதற்காக கமிட்டி ஒன்று அமைப்பது. பிரிக்கப்படவிருக்கும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு சில உதாரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன:
நேச நாடுகளுக்காக பிரிக்கப்படவிருந்த ஜேர்மனியின் எல்லைகள்: