இசுலாமிய அப்பாசியக் கலீபகம் الخلافة العباسية الإسلامية al-‘Abbāsīyūn | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
750–1258 1261–1517 கெய்ரோவின் மாம்லுக் (Mamluk) சுல்தானிய ஆட்சியின் கீழ் | |||||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||||
தலைநகரம் | பக்தாத் | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி (அதிகாரம்), அராமைக்,ஆர்மேனிய மொழி, பாபர் மொழிகள், சார்சிய மொழி, கிரேக்கம், எபிரேயம், நடுப் பாரசீகம், ஓகுஷ் துருக்கம், குர்டியம் | ||||||||||||||||
சமயம் | சுன்னி இசுலாம் | ||||||||||||||||
அரசாங்கம் | கலீபகம் | ||||||||||||||||
அமீருல்-முஃமினின்¹ கலீபா (خليفة) | |||||||||||||||||
• 750–754 | அசு-சஃபா (As-Saffah) | ||||||||||||||||
• 786–809 | ஹாரூன் அல்-ரசீத் | ||||||||||||||||
• 1508–1517 | அல்-முதவக்கில் (al-Mutawakkil) III கெய்ரோவின் இறுதிகலீபா (خليفة) | ||||||||||||||||
• 1242–1258 | அல்-முசுத்தஃசிம் Al-Musta'sim (last Caliph in Baghdad) | ||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||
• தொடக்கம் | 750 | ||||||||||||||||
• முடிவு | 1258 | ||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||
10,000,000 km2 (3,900,000 sq mi) | |||||||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||||||
• | 50000000 | ||||||||||||||||
நாணயம் | அப்பாசிய தினார் Dinar (gold coin) Dirham (silver coin) Fals (copper coin) | ||||||||||||||||
| |||||||||||||||||
¹ அமீருல்-முஃமினின் (أمير المؤمنين), கலீபா (خليفة) |
அப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.
இவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச கு
ன்றோரிடமும் இழந்தனர்.
மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.
முஹம்மதுவின் மாமா அல்-அபாஸ் இபின் அப்துல் முத்துலிபின் (Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib) நேரடி வம்சாவளியான அல்-முஸ்தாஸிமின் (Al-Musta'sim) இரத்தம் சிந்தினால் மாபெரும் இயற்கைச் சீரழிவு ஏற்படும் என்று மங்கோலியர்கள் அஞ்சினர்.
அரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும் திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார்.
9 ஆம் நூற்றாண்டில், அப்பாசியத் தலைவர்கள் தங்கள் கலீபகத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்கினர். இந்த இராணுவத்தில் அரபியர் அல்லாத மாம்லுக்குகள் (Mamluks) எனப்படும் இனத்தவர் மட்டுமே இருந்தனர். இந்த படை அல் மாமுன் (al-Ma'mun) ஆட்சியை (813–33) உருவாக்கியது. மேலும் அடுத்து பதவி ஏற்ற அவருடைய சகோதரர் அல்-முத்தஸிம் (833-42), பேரரசின் சீர்குலைவுகளைத் தடுத்தனர். மாம்லூக்குகளின் ஆற்றல் அல்-ரேடி (al-Radi) (934-41) காலம் வரை சீராக வளர்ந்து வந்தது. இதனால் முஹம்மது இப்னு ரைக் (Muhammad ibn Ra'iq) தன்னுடைய அரசின் பெரும்பகுதியை மாம்லூக்குகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில் 1261 இல் மாம்லூக்குகள் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினர். அல்-முத்தவக்கில் (Al-Mutawakkil) III வரை கெய்ரோவின் அப்பாசியக் கலீபக ஆட்சி நீடித்தது. அல்-முத்தவக்கிலை, கான்ஸ்டன்டினோப்பிளில் உள்ள சிறைச்சாலையில் சலிம் (Selim) I அடைத்து வைத்தார். 1543 இல் கெய்ரோவிற்குத் திரும்பிய பின்னர், அல்-முத்தவக்கில் இறந்தார்.
அப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை. அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர். அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர்.
இஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,"ஆயிரத்தொரு இரவுகள் பற்றிய புத்தகம்." இது அப்பாசியக் கலீபக காலகட்டத்தில் எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்ட முதன்மையான தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு சசானிய சகாப்தங்களிலிருந்தும், பாரசீக முன்மாதிரியிகளிலிருந்தும், இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரபு, பாரசீக, மெசொப்பொத்தமியன், மற்றும் எகிப்திய நாட்டுப்புற கலை, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வந்த கதைகள் பின்னர் இணைக்கப்பட்டன. இந்த காவியமானது 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் இறுதி வடிவம் அடைந்ததாக நம்பப்படுகிறது. கதைகளின் எண்ணிக்கைகளும், வகைகளும், ஒவ்வொறு கையெழுத்துப் பிரதியிலும் வேறுபட்டு உள்ளது. அனைத்து அரேபிய கற்பனை கதைகளும் "அரேபிய இரவுகள்" என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, இக்கதைகள்,"ஆயிரத்தொரு இரவுகள்" புத்தகத்தில் பதிப்பிடப்பட்டதை உறுதி செய்யவிலை. 18 ஆம் நூற்றாண்டில், அண்டோய்னெ கல்லண்டால் (Antoine Galland) மொழிபெயர்க்கப்பட்டது முதல், இந்த காவியம் மேற்கு நாடுகளில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது. பிரதிபலிப்புகள் குறிப்பாக பிரான்சில் பிரெஞ்சு மொழியில், இது போன்று பல போலியான கதைகள் எழுதப்பட்டன.
இந்த காவியத்தின் கதாபாத்திரங்களான அலாதீன் (அலாவுதீன்), சின் பாட்(Sinbad), அலி பாபா (Ali Baba), பல்வேறு மேற்கத்திய கலாச்சாரங்களில் கலாச்சார அடையாளங்களாக இன்றும் வலம் வருகின்றனர்.
இஸ்லாமிய காதல் கவிதைக்கு மீது பிரபலமான ஒரு உதாரணம் "லைலாவும், மஜ்னூனும்." இது ஈரானியரால் ஈரானிய மொழியிலும், பிற கவிஞர்களால் பெர்சிய மொழியிலும் உருவாக்கப்பட்டது. இது 7 ஆம் நூற்றாண்டில் உமய்யாத் சகாப்தத்திற்கு முற்பட்டது. இது பிற்கால ரோமியோ (Romeo) ஜூலியட் (Juliet) போன்ற துயர் நிறைந்த அழியாத காதல் கவிதை ஆகும்.
அப்பாசியக் கலீபகம் மற்ற கலீபகங்களிலிருந்து மாறுபட்டது. இது மற்ற கலீபகங்கங்களைப் போன்று மாறாத எல்லைகளையும், இஸ்லாம் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, அப்பாசியக் கலீபகத்தின் மேற்குப் பகுதியில், பல சிறிய கலீபகங்கங்கள் இருந்தன. அவை அப்பாசியக் கலீபகத்துடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன. தங்கள் பொது புவியியல் இருப்பிட அமைப்பின் அடிபடையில் அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் பட்டியல்