பண்டிட்ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),, உலகப் புகழ் பெற்ற இந்தியசிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
விருதுகள்
1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது.
இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு பண்பாட்டு நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது
கிராமி விருதுகள்
1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.